சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11:30 மணிக்கு போக்குவரத்து கழகம் சார்பில் நகர பேருந்து இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறிய போது, 20 ரூபாய் 40 ரூபாய் 60 ரூபாய் என ரயில் பயணச்சீட்டு பெற்று ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து வீடு திரும்புவதற்கு பேருந்து இல்லாததால் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி ஆட்டோவில் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

பயணிகளின் நலன் கருதி 11:15 மணிக்கு ரயில் நிலையத்திலிருந்து நகர பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.