தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயியான இவர் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் மது அருந்தும் பழக்கமுடைய இவர் நேற்று மதியம் நன்றாக மது அருந்தியுள்ளார். அதன் பிறகு குடிபோதையில் நடந்து வந்த இவர் நிலைத்தடுமாறி அருகே இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது மனைவி ராணி உறவினர்களுக்கு தகவல் கொடுக்க அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த நரசிம்மனை சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.