நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் மறைந்த வக்கீல் பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65) கொள்ளை முயற்சியில் சிக்கி நகையை இழந்துள்ளார். சம்பவத்தன்று விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றபோது, 25 வயது இளைஞர் ஒருவர், பாதுகாப்பு கருதி மாலையில் தங்க நகைகளை அணிய வேண்டாம் என அறிவுறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

நன்றாக பேசிக்கொண்டிருந்த , அந்த வாலிபர் திடீரென யாருமில்லா சூழ்நிலையறிந்து மணிமேகலையிடம் நகைகளை கழற்றுமாறு வற்புறுத்தி, பேப்பர் பையை அவரிடம் கொடுத்துள்ளார். பின் மணிமேகலை அவர்கள் நகைகளை கழட்டி பையில் போட்ட மறுகணம் 12 பவுன் நகையுடன் மர்ம வாலிபர் தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து  பரமத்திவேலூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.