நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இன்று ஜான் பாண்டியனின் தமமுக கட்சிக்கு 1 தொகுதி, அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ் அணியினர் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் ஆலோசனை செய்து முடிவை சொல்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது.