தைவானில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சீன ராணுவம் பகிரங்கமாக மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது.

இது குறித்து சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சீன மக்கள் விடுதலை ராணுவம் விழிப்புடன் தான் இருக்கிறது. தைவானின் அனைத்து விதமான சுதந்திர முயற்சிகளையும் முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.