மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முகமது கௌஷிக் என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது தாசில்தார் ஜெயராமன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பலராமன், உதவி தேர்தல் அலுவலர் அபிநயா அவர்களிடம் ஒப்படைத்தார்.