விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணக்கி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் மூலம் மனைவி மற்றும் உறவினர்களது பெயரில் ஜெயக்குமார் 35 லட்ச ரூபாய் பணத்தை இழப்பீடாக வாங்கியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஏற்கனவே ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்திய அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் பி.வள்ளிக்கண்ணு ஜெயக்குமாரை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.