விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நெல்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாம்ராஜ் பிரபு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பிரபுவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. பின்னர் பிரபுவை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் பகுதி நேர வேலையில் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் ஒரு லிங்க் அனுப்பி அந்த லிங்கில் சிறிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதன்படி பிரபு குறைந்த அளவு முதலீடு செய்யும் போது அவருக்கு அடுத்தடுத்து கூடுதல் பணம் வந்தது. அதனை நம்பி பிரபு 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்த பிரபு விழுப்புரம் மாவட்ட செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அங்கு புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.