பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் என்ற தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்,பீகாரை சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவுகிறது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை.

ஆளுநர் எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இது போன்ற தவறான செய்தி மற்றும் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.