தமிழகத்தில் திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியல் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிய அமைச்சர் மற்றும் நிர்வாக செலவை குறைத்தால் தான் பால் விலையை குறைத்து கொள்முதல் விலையை உயர்த்த முடியும். அதிக எண்ணிக்கையில் தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் டி ஆர் பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியல் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதில் அமைச்சர்கள் உட்பட மொத்தம் 21 பேர் இடம் பெறுவார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் மீதான ஊடல் பட்டியல் எப்போது என்பதும் ஜூலை மாதம் தெரிவிக்கப்படும். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக இதுவரை தலையிடவில்லை. நீதிமன்றம் வரை சென்று முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிறகு தான் அதிமுகவுடன் பாஜக பேச்சி நடத்தியது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.