தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு தெலுங்கானாவில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் செயல்படுத்த தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து இந்த திட்டத்தை ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.