விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். பாரம்பரிய கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் கடன் வசதியும் வழங்கப்படும். தச்சு, கொத்தனார், குயவர், கொல்லர் மற்றும் பிற தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.