சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு கோவிந்தன் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த சென்ரூட்க்(31) என்பவர் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சென்று தெருவில் நடந்து சென்ற போது அவரது கையில் ஏதோ தாக்கி திடீரென ரத்தம் வெளியேறியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சென்ரூட்க்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்ததில் அவரது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ரியல் எஸ்டேட் தரகரான லாரன்ஸ் என்பவர் பறவையை வேட்டையாடுவதற்காக குறி வைத்துள்ளார். ஆனால் குறி தவறி வட மாநில வாலிபன் மீது குண்டு பாய்ந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரன்ஸை கைது செய்து அவரிடம் இருந்த ஏர்கன்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.