தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களை இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மற்றும் சென்னை இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகின்றது. குமரி மற்றும் சென்னை இடையேயான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகிறது.

கொல்லம் மற்றும் சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் சென்னை இடையேயான அந்தியோதய எக்ஸ்பிரஸ் விருதுநகரிலிருந்து இயக்கப்படுகிறது. 22620 நாகர்கோவில் மற்றும் சென்னை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டியிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.