தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் சேலையில்தான் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என்றும் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.