தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மக்களின் நலனுக்காக 2500 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. உழவர் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து நலன் காக்க அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் களத்தில் உள்ளார்.
6 நாட்களில் பொறுப்பு அமைச்சர்கள் 10 பேர், எம்பி, எம்எல்ஏக்கள் பணியில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்ய பணியாற்றுகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.