தமிழகத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மதிப்பூதியம் 3600-ல் இருந்து தற்போது ஐந்தாயிரம் ரூபாயாக தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது. தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில் தூய்மை காவலர்களுக்கு அரசு தற்போது மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.