இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 -4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒ ருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.