பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு துருக்கி கால்பந்து கிளப் அடகாஸ் ஹடய்ஸ் போர்க்காக விளையாடி வருகிறார். செல்சி உள்ளிட்ட பல முக்கிய அணிகளுக்கு விளையாடியுள்ள இவர், துருக்கியில் தங்கி இருந்தபோது, கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது சிக்கிக்கொண்டார்.

இந்நிலையில் மீட்புப்பணியின்போது இடிபாடுகளை அகற்றிய நிலையில், அங்கு கிறிஸ்டியனின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட அவரது உடல், கிறிஸ்டியனின் சொந்த நாடான கானாவிற்கு அனுப்பப்படவுள்ளது.