தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத்தேர்வு எழுதிய 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் அவரவர் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.