உ.பியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர், தீராத மனஅழுத்தத்தில் இருந்ததால் தனது இரு குழந்தைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி தலையில் கொடூரமாக அடித்தும் கொலை செய்தார். பின்னர், தனது மனைவியையும் சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.