தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் 10ஆம் தேதி அதாவது நாளை மற்றும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 10 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் எனவும் இந்த ரயில் மறு மார்க்கமாக நவம்பர் 11 மற்றும் நவம்பர் 13 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.