இந்த நாடு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது என நடிகை கங்கனா ரணாவத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, படப்பிடிப்பு தளங்களில் இருந்து கொண்டு அரசியல் கட்சிகளுடன் சண்டையிட்டு இருக்கிறேன். நாட்டிற்கு நான் திருப்பிக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. நான் அரசியலில் இறங்க வேண்டும் என்றால் அதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறியுள்ளார். எனவே கங்கனா ரணாவத் தேர்தலில் களமிறங்க இருப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.