மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதலமைச்சர் கன்யா திருமண உதவி திட்டத்தின் கீழ்இதுவரை 49 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த உதவி தொகை 51 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே லட்லி பஹன்னா யோஜனாதிட்டத்தின் மூலமாக ஜூன் 10ஆம் தேதி முதல் தகுதி உள்ள பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் மூலமாக ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது ரூபாய் 1.18 லட்சம் தொகையானது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு குழந்தைக்கு 21 வயது நிறைவடையும்போது இந்த நிதி உதவி அவர்களுக்கு வழங்கப்படும். தனது அரசு பெண்களுக்கு காவலர் மற்றும் ஆசிரியர் பணி நியமனங்களில் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.