ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியந்தாங்கல் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்துக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் ஜாதகம் பார்த்தனர். ஆனால் ஜாதகம் பொருந்தாமல் 7 ஆண்டுகளாக திருமணம் தள்ளிப்போனதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.