புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூத்தியன்காடு கிராமத்தில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பெரிய நாயகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தகுமார் ஆலங்குடியைச் சேர்ந்த மதியழகன், மாணிக்கம் ஆகியோரிடம் கடன் வாங்கினார். இருவரும் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தகுமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆனந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.