தேனி மாவட்டத்தில் உள்ள போடி டி.வி.கே.கே நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் சதீஷ்குமாருக்கு ஏற்ற வரன் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் ரங்கநாதபுரத்தில் இருக்கும் தனது தம்பி ஒர்க்ஷாப் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால் கயிறு அறுந்து கீழே விழுந்ததால் சதீஷ்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த சதீஷ்குமாரின் தம்பி மதன் அங்கு சென்று தனது அண்ணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.