தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபேரில் பழனி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பழனி சிவகிரி பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாலையில் இறந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பழனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.