திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி கோவிலில் மார்ச் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் பெற நாளை ஆன்லைனில் முன்பதிவு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு தொடங்கும் என்றும் மார்ச் 1 முதல் 31ஆம் தேதி வரையிலான திருக்கல்யாணம்,ஊஞ்சல் சேவை மற்றும் ஆயுதபிரம்மோற்சவ டிக்கெட் முன்பதிவு ஆகியவை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.