திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, காணமல்போன சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் காணாமல்போன குழந்தையை 12 மணி நேரத்தில் திருப்பதி போலீசார் மீட்டனர். குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதி அவர்களது 2 வயது மகனுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 3 நாட்கள் முன்பு திருப்பதிக்கு வந்த நிலையில், ஆர்டிசி பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர்களின் குழந்தை காணமல்போனது.