இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் திருநெல்வேலி மற்றும் தாம்பரம் இடையே சிறப்புரையில் நாளை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து நாளை மார்ச் 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மார்ச் 27ஆம் தேதி காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயிலானது கோவில்பட்டி, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.