தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி டான்செட் மற்றும் சி இ இ டி ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. டான்செட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெற உள்ளது. டான்செட் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டும். சி இ இ டி ஏ தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.