விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை (மே6) முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

அதன் பிறகு அனுமதிக்கப்பட்ட நாளில் திடீரென மழை எதுவும் பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை மலையேறும் போது கொண்டு செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.