திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழாக்களை  முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது .

அதனால் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு அதனை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும். இதனை போலவே ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழாவான புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகின்ற மே 13ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.