அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான். நிரந்தர பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தொண்டர்களில் ஒருவனை முதலமைச்சர் ஆகும் கடமையை எனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.மேலும் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கட்சியை நிதியிலிருந்து ஒரு பைசா கூட நீங்கள் செலவு செய்யக்கூடாது என்று எடப்பாடி அணியினரை ஓபிஎஸ் கடுமையாக சாடினார். எடப்பாடி அவர்களே! உங்களுக்கு யார் பதவி தந்தது? இவ்வளவு பெரிய துரோகி நீங்கள்? உங்களை வரலாறு மன்னிக்குமா? என்று ஆவேசமாக பேசினார்.