மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு இடையே சுற்றுலாத் தலங்கள் வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது பரவி வருவது வீரியமற்ற வைரஸ். இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்திய அளவில் 11,000 தொற்று எண்ணிக்கை வந்தாலும்கூட தமிழ்நாட்டில் பாதிப்பு 500 வரை சென்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

போலி மருத்துவர்கள் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள். இது நீண்ட காலமாக இருந்தாலும் திமுக ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஒரே நாளில் 73 போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்