திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருக்குறள் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நடைபெறும் இந்த போட்டியில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 10 திருக்குறள் சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும்.

பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் 20 திருக்குறள் சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் திருக்குறளை எழுதிக்கொண்டு போட்டியில் கலந்து கொள்ள வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.