புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை வளாகத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 1128 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அபுதாகிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துப்பாண்டி, பிரேம்குமார், விஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர் மேலும் இரும்பு கம்பிகள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.