புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் விவேகானந்தா நகரில் அருள் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அருள்சாமி கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அருள்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருள் சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.