பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் நகரில் நமச்சிவாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி (50) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று நளினி தனது வீட்டிற்கு எதிரே நின்று விஜயதாரணி என்ற பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபர் நளினியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தம்பி சென்றார். இதுகுறித்து நளினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.