சென்னையில் கேரளா மீடியா அகாடமி, சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் என்ற சொல் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. தமிழ்நாடும் கேரளாவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இந்தியாவிற்கு விடியலை தர வேண்டும். நாம் அனைவரும் திராவிட மொழி என்ற ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை ஒன்றாக எதிர்க்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஊடகத்தினரை உருவாக்குவதில் மலையாள அகாடமி முக்கிய பங்காற்றுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.