பாஜக சார்பாக நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் பேசியதாவது “மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் என வாக்குறுதி கொடுத்த திமுக இதுவரை கட்டித் தரவில்லை. ஆட்சிக்கு வந்து 2 1/2 வருடங்கள் ஆகியும் ஒரு வீடு கூட திமுகவால் கட்டிக் கொடுக்க முடியவில்லை.

அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் 54 ஆம் எண்ணில் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் கட்டித் தரப்படும் என குறிப்பிட்டு இருந்தனர். ஆனால்………” என்று பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை திடீரென தனது கையில் செங்கலை தூக்கி காட்டியுள்ளார். இவராக திமுக மீது குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்துள்ளார். திடீரென அண்ணாமலை கையில் செங்கலை எடுத்தது நிகழ்ச்சியில் பங்குபெற்ற கூட்டத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.