வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஒருபக்க சார்பு நிலை எடுக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேசிய அவர், “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

ஆனால், திமுகவினர் மட்டும்தான் தவறு செய்கிறார்களா? மற்ற கட்சிகள் எதுவும் தவறே செய்வதில்லையா” என்று கேள்வி எழுப்பி, ஒருபக்க சார்புநிலை எடுக்ககூடது என விமர்சித்துள்ளார்.