பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், இரண்டு வழித்தடங்களிலும் நெரிசலை குறைக்கவும், மெட்ரோ ரயில் சேவயை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்களில் அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக, மழை காலம் தொடங்கி உள்ளதால், போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்ய மெட்ரோ ரயில்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய விரும்புகின்றனர். எனவே 9 நிமிடத்திற்கு இயக்கப்பட்டு வந்த ரயில்கள் 7 நிமிட இடவெளியில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.