கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 4ம் தேதி கவுண்டிங் ஆரம்பித்த மூன்று, நான்கு சுற்றுகளிலேயே திமுக டெபாசிட் வாங்காது என தெரிந்துவிடும். திமுக டெபாசிட் இழக்க கூடிய முதல் தொகுதி கோயம்புத்தூர் தான். தோல்வி பயத்தில் திமுக உள்ளது. டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு மக்களின் கோபத்திற்கு திமுக ஆளாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.