விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கு முதல் முறையாக ஆதரவு தெரிவித்து அவரின் தம்பி சண்முக பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, என் அண்ணனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தேன், ஒரு தடவையாவது என் தந்தை விஜயகாந்தை ஜெயிக்க வைத்திருக்க வேண்டும் என மக்கள் என்னிடம் வருத்தப்பட்டு சொன்னார்கள். அவர் சாயலில் இருக்கும் விஜய பிரபாகரனை நீங்கள் ஜெயிக்க வைத்தாலும் என் தந்தை ஆத்மா சாந்தி அடையும், நீங்கள் நினைத்தது நடக்கும் என்று உருக்கமாக பேசினார்.