இந்த 2023 ஆம் வருடமானது முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. 2024 ஆம் வருடம் பிறக்க இருக்கும் நிலையில் கர்நாடகாவில் தினசரி செய்தித்தாள் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு விபத்து இழப்பீடு மற்றும் மருத்துவ வசதி திட்டத்தை வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் பலன் பெறலா.ம் மேலும் 16 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட செய்தித்தாள் விநியோக ஊழியர்கள் சேவா கேந்திராவில் உடனடியாக இணைந்து கொள்ளலாம்.

இவர்களுக்காக டிசம்பர் 28 மற்றும் 30ஆம் தேதிகளில் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகம் மற்றும் ஜனவரி 3ஆம் தேதி தொழிலாளர் அலுவலர் அலுவலகங்களில் சிறப்பு ஈஷ்ராம்  பதிவுகள்  நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மூலமாக பணியாளர்கள் விபத்து இழப்பீடு மற்றும் மருத்துவ வசதி திட்ட வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.