திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ராஜா நகர் பகுதியில் புதிதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆறுமுகம் என்பவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து ஆறுமுகம் மேல் விழுந்தது.

இதனால் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.