நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் கூடலூர் காசிம்வயல் பகுதியில் வசிக்கும் மைதீன் தனது பழைய வீட்டை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்தார். அப்போது மாலை எதிர்பாராதவிதமாக வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பாபு, சசிகுமார் ஆகிய தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாபுவையும்8, சசிகுமாரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அந்த பணியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பித்தனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது.