நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வர். கடந்த சில நாட்களாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் நீர்வீழ்ச்சிக்கு சொல்ல வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அடிவாரத்தில் இருக்கும் காரவள்ளி சோதனை சாவடி முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.